Fast Shipping Across India
Mayura Shop Plants, Seeds & Grow Bags
mulberry plant - மல்பெரி செடி
Fruits Plants

mulberry plant - மல்பெரி செடி

₹180.00
Out of Stock
100% Genuine Quality Damage Free Delivery

Description & Details

நீர் பாய்ச்சுதல் மற்றும் களை மேலாண்மை

நடவிற்குப் பிறகு வாரத்திற்கு இரண்டு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 32 மற்றும் 60வது நாளில் களை எடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த மூன்று முதல் ஆறு மாத நாற்றுகளை இடம்பெயர்த்து நடவு செய்யலாம்.

நடவு செய்தல்

மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ (75,105 - 90 செ.மீ) நடவு மேற்கொள்ளலாம்.

உரமிடுதல்

ஒரு ஏக்கர் நிலத்துக்கு,  வருடத்திற்கு  8 டன் தொழுஉரம் தேவைப் படும். இதை அடி கவாத்துக்குப் பிறகு இடவேண்டும்.

இறவைப்பயிருக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 300:120:120 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து சிபாரிசு செய்யப்படுகிறது. உயர் விளைச்சல் இரகமான வி.1ற்கு 375:140:140 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கு இடவேண்டும்.

உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரங்களின் செலவைக் குறைக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

பட்டுப்புழுவின் வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ மற்றும் தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மல்பெரி செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்க வேண்டும். இலைவழி ஊட்டச்சத்துக்களான செரி பூஸ்ட் (Seri Boost) (அ) போஷன் (Poshan) ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் அவை ஒளிச்சேர்க்கையை துரிதப்படுத்தி இலையின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

காலை அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடை செய்த இலைகளை ஈரமான சாக்குத் துணியில் வைத்துக்கொள்வதன் மூலம் இலையின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். முதிர்ந்த புழு வளர்ப்பில் தண்டு அறுவடை முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மல்பெரியை தண்டு அறுவடை செய்து வேலையாட்கள் மற்றும் நேர செலவைக் குறைக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செடியினை அடிவெட்டு வெட்டி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் செடி நட்டதிலிருந்து 12 முதல் 15 வருடம் மகசூல் குறைவின்றி தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

 

பூச்சி மேலாண்மை 

மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால், பட்டுப்புழு தொழிலானது பெரும் சரிவைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றின் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.

மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமாக விளங்குபவை மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப் பேன், கரையான் போன்றவையாகும்.

மாவுப்பூச்சி

வெள்ளையாகப் பஞ்சு போல படர்ந்த முட்டைகளுடன் கூடிய இந்தப் பூச்சிகள், கூட்டமாக இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் பரவி சேதாரத்தை ஏற்படுத்தும். இவை இளம் தண்டின் சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடுகின்றன. இந்தப் பூச்சிகள் மல்பெரி மட்டுமல்லாது பப்பாளி, மரவள்ளி, பார்த்தீனியம், துத்தி, செம்பருத்தி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கவல்லது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே எனும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளியிட வேண்டும். மல்பெரி சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் புரபனோபாஸ் அல்லது புப்ரோபெசின் என்னும் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலை பிணைக்கும் புழு

மல்பெரி செடியின் இலைகளின் நுனிப் பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும். வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்பதுடன் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அவை பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள், செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இத்தகைய புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த மல்பெரி செடிகளை கவாத்து செய்த உடன் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டருக்கு 5 அட்டை வீதம் கட்ட வேண்டும்.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் டைக்குளோர்வாஸ் என்னும் பூச்சிக் கொல்லி 1 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்     

இந்தப் பூச்சிகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி அதன் சாற்றினை உறிஞ்சி விடுகின்றன. இந்தப் பூச்சிகள் தாக்கப்பட்ட இலைகளில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் அவை பட்டுப்புழு உணவாக பயன்படுத்த முடியாது.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் வாடியும், இலைகள் சிறுத்தும் வெளிறிய கோடுகளுடன் காணப்படும். இந்த வகை பூச்சிகளை கட்டுப்படுத்த கைத்தெளிப்பானில் தண்ணீரைக் கொண்டு தெளிப்பதன் மூலம் பேன்கள் நீருடன் கழுவிச் செல்லப்படுகின்றன. ஏக்கருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி வீதம் வேப்பெண்ணையை கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.

You May Also Like

Sweet Cherry Plant
OUT OF STOCK
Fruits Plants Sweet Cherry Plant
₹350.00
Peach Fruit Plant
OUT OF STOCK
Fruits Plants Peach Fruit Plant
₹380.00
Apple Plant
OUT OF STOCK
Fruits Plants Apple Plant
₹599.00
தேன் பழ மரம்
OUT OF STOCK
₹100.00