மகோகனி மிக வேகமாக வளரும் மர வகைகளுள் ஒன்று. அதிக உயரம் அதாவது ஐம்பது அடிக்கு மேல் வளரும் தன்மை கொண்டது. மகோகனி நட்ட பத்து வருடம் முதல் அறுவடை செய்யலாம். விரைவில் வைரம் பாயும் தன்மை கொண்டது
நம்முடைய ஒரு பகுதி நுரையீரல் மரங்களில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என சத்குரு நமக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறார். சுற்றுச்சூழல் நலன் காக்கவும் வரும்கால சந்ததியினர் சுகமாக சுத்தமான காற்றை சுவாசிக்கவும் மரங்களை நட்டு பசுமைப் பரப்பை அதிகரிப்பது அவசியமாகிறது. அதேசமயத்தில் பொருளாதார ரீதியாகவும் மரம் வளர்த்தல் அதிக பயனை தருகிறது. அந்த வகையில் டிம்பர் வேல்யூ என சொல்லப்படும் அதிக பருமனுள்ள பெரிய மர வகைகளுக்கு சந்தையில் மதிப்பு அதிகம் உள்ளது. மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது.
‘மகோகனி’ என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது.
உதாரணமாக, தேக்கு, செம்மரங்கள், மகோகனி போன்ற மரங்கள் மனிதனுக்கு குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, மேசைகள், நாற்காலிகள் போன்ற மரச்சாமான்கள் செய்ய உதவக் கூடியவைகளாக உள்ளன.
இவற்றுள் ‘மகோகனி’ என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது. இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.
மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட, ‘மீலியேசி’ எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.